உலகின் உயரமான துபாய் புர்ஜ் கலிபாவில் இளையராஜா.... மார்ச் 27-ல் ஷார்ஜாவில் இசை நிகழ்ச்சி

துபாய்: உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபாவிற்கு இன்று காலை வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சர்வதேச‌ தலைமை அதிகாரி கமலகண்ணன், அமீரகத்திற்கான தலைமை அதிகாரி நிவி தலைமையிலான குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ஒருங்கினைத்திருந்தனர். இந்த நிகழ்வு ஹால் ஸ்டுடியோஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இளையராஜா  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மார்ச் 27ல் நடைபெறும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும் என்றும் விபரங்கள் சஸ்பெண்ஸ்சாக இருக்கும் என தெரிவித்தார். தொழிலதிபர்கள் ரமேஸ் பிள்ளை மற்றும் ஆண்டன் ஜஸ்லி இணைந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

Related Stories: