துபாய்: உலகின் உயரமான கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபாவிற்கு இன்று காலை வருகை தந்த இசையமைப்பாளர் இளையராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சர்வதேச தலைமை அதிகாரி கமலகண்ணன், அமீரகத்திற்கான தலைமை அதிகாரி நிவி தலைமையிலான குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ஒருங்கினைத்திருந்தனர். இந்த நிகழ்வு ஹால் ஸ்டுடியோஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.