சென்னை:மாநிலங்களவையில் நேற்று நடந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம், 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் நாள், சென்னையில் நிறுவப்பட்டது. 2001ம் ஆண்டு நடந்த தோஹா மாநாட்டில் திறமையாக வாதாடி, காப்பு உரிமைச் சட்டங்கள் குறித்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தந்த, தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் முயற்சியால், அந்த வாரியம் அமைந்தது. 1999 வணிக உரிமைக் குறிகள் சட்டத்தின்படியும், 1999 புவிசார் குறியீடு, வணிகப்பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படியும் பதிவாளர் எடுக்கிற முடிவுகள் குறித்த மேல்முறையீடுகள் மீது, கடந்த 16 ஆண்டுகளாக, தீர்ப்பு வழங்கி வருகிறது. சென்னையை தலைமை இடமாகக் கொண்ட இந்த வாரியத்தின் சுற்று அமர்வுகள், மும்பை, புதுடெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வட இந்தியாவுக்கு மாற்றுவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது : நாடாளுமன்றத்தில் வைகோ பேச்சு
- பாராளுமன்ற
- அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியம்
- தேசிய ஒருங்கிணைப்புக்கு எதிரான வட இந்தியா: வைகோ பேச்சு
- பேச்சு
- தேசிய ஒற்றுமை: வைகோ
- வட இந்தியா