ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் விளைச்சல் இருந்தும் நெல்லுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தானியங்களை சேமித்து வைக்க கிடங்கு வசதி இல்லாமல், ஊர்தோறும் உலர்களம் இல்லாமலும் அவதிப்படுகின்றனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், விவசாயிகள் கரும்பு, சோளம், பயறு வகைகளை விளைநிலங்களில் பயிரிட்டனர். தற்போது நெல் உள்ளிட்ட விளை பொருட்களை அறுவடை செய்யும் நிலையில், அவைகளுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். மேலும், விளை பொருட்களை சேமித்து வைக்க போதிய குடோன் வசதியும் இல்லை.