ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூரில் பாழடைந்த வீட்டில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்த திருநின்றவூர், வச்சலாபுரம், 3வது தெருவில் பாழடைந்த வீடு உள்ளது. இந்த வீட்டினை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமையாளர்கள் பயன்படுத்தாமல் விட்டுள்ளனர். நேற்று காலை இந்த வீட்டில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சோதனையில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். வாலிபரின் தலை, முதுகு, கால் உள்ளிட்ட 10 இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் இருந்தன. சடலமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 25 வயதிருக்கும். இவர் ரோஸ் கலரில் லூங்கியும், கருப்பு கலரில் சட்டையும் அணிந்திருந்தார். சடலம் கிடந்த இடத்தில் காலி மதுபாட்டில்கள், தின்பண்டங்கள் சிதறிக்கிடந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
ஆவடி அடுத்த திருநின்றவூரில் பயங்கரம் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை : பாழடைந்த வீட்டில் சடலம் மீட்பு
- Aruvadi
- வாதியாகவும்
- திருநின்வூர் பயங்கரவாத இளைஞர் அணிவகுப்பு
- மீட்பு
- Thiruninvur
- ஆவடி
- வீட்டில்
- இறைச்சி கூடத்திற்கு