புதுடெல்லி: நாட்டின் பாதுகாப்பு பணியிலும், எல்லை பாதுகாப்பு பணியிலும் ராணுவமும், துணை ராணுவப் படைகளும் ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வரும் நிலையில், இந்த வைரசால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் முயற்சியில் இவையும் களமிறங்கி உள்ளன. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லி வந்தடையும். இதில் வரும் 300 பேரை தங்க வைத்து கண்காணிப்பதற்கான சிறப்பு முகாமை, டெல்லி அருகே உள்ள மனேசாரில் 300 படுக்கை வசதியுடன் ராணுவம் அமைத்துள்ளது.