நாகர்கோவிலில் பரபரப்பு: அம்மன் கோயிலில் துணிகர கொள்ளை

நாகர்கோவில்: நாகர்கோவில் பால் பண்ணை அருகே பிரசித்தி பெற்ற நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த அலுவலக அறையை உடைத்து, வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருந்தன.

இது குறித்து கோயில் நிர்வாகிகள் நேசமணிநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. கோயிலில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அந்த கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் சுவர் ஏறி குதிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. கடந்த செவ்வாய்கிழமை தான் உண்டியல் திறந்து எண்ணி உள்ளனர். இந்த கோயில் நாகர்கோவில் கே.பி. ரோட்டில் பிரதான பகுதியில் உள்ளது. அந்த கோயிலில் மர்ம நபர்கள் புகுந்து கைவரிசை காட்டி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: