மதுரை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த தடைகோரி உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புராதன தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயில் குடமுழுக்கை நடத்த தடை தேவை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றசாட்டு அளிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் குடமுழுக்கு நிகழ்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.