கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை சுலப தவணையில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்த தொழிலாளி ஒருவர், ஊழியர்களை மிரட்டி பொருட்களை தாக்கி உடைக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் கையில் அரிவாளுடன் நுழையும் தொழிலாளி, ‘‘ஏடிஎம் கார்டை செக் பண்ணுடா... எனது மனைவியை அவதூறாக பேசியது எவன்டா’’ என கோபத்துடன் தகாத வார்த்தைகள் பேசியபடி, அரிவாளை வைத்து ஊழியர்களுடன் தகராறு செய்து மிரட்டுவது போல் இருக்கிறது.