அயோத்தி: அயோத்தியில் இனி போலீசார் விடுப்புக்காக ஒவ்வொரு அதிகாரியாக சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல், ஆப்பிலேயே விடுப்பு கேட்டு தகவல் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தில் மூத்த போலீஸ் எஸ்.பி.யாக சமீபத்தில் ஆசிஷ் திவாரி பதவியேற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை, ஒரு போலீஸ்காரர் அவரிடம் வந்து தனது தாய் இறந்துவிட்டதாகவும், அதற்காக தனக்கு விடுப்பு வேண்டும் என்றும் கூறியுள்ளார். முதல் நாள் இறந்த தாயின் உடலை வீட்டில் வைத்துவிட்டு, விடுப்புக்காக காலையில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் அதிகாரி, சர்க்கிள் அதிகாரி, கூடுதல் எஸ்.பி. என்று ஒவ்வொருவராக பார்த்து விடுப்புக்கு அனுமதி வாங்கிக் கொண்டு, இறுதியில் மூத்த போலீஸ் எஸ்.பி.யான ஆசிஷ் திவாரியை சந்திக்க வந்துள்ளார். அதாவது தாயின் மரணத்து–்க்கு விடுப்பு கேட்டு, ஒரு நாள் முழுக்க ஒவ்வொரு அதிகாரியாக அனுமதி வாங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது.