ஆலப்புழா: கேரளாவில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசலில் இந்து மதத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா அருகே உள்ள சேரவல்லி பள்ளிவாசலில் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது. சேரவல்லியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் தனது மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்துவைக்க உதவிகோரி அதே பகுதியில் உள்ள முஸ்லீம் ஜமாத் கமிட்டிக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு உதவ முன்வந்த ஜமாத் கமிட்டியினர், பள்ளிவாசலிலேயே திருமணத்தை நடத்த இடமும் தந்து உதவியுள்ளனர்.