மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 15ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகளுக்கு தினசரி காலை, மாலை 2 வேளையும் நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. ஷவர் மற்றும் குளியல் மேடைகளில் பாகன்கள் யானைகளை குளிக்க வைக்கின்றனர்.இந்த நிலையில் முகாமில் நேற்று யானை பொங்கல் கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலைெயாட்டி முகாமில் உள்ள யானைகளுக்கு யானை பொங்கலிடப்பட்டது. முகாமின் அருகே அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பாக யானைகள் நிறுத்தப்பட்டு புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்தனர்.
தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பொங்கல் விழா: யானைகள் குதூகலம்
- பொங்கல் திருவிழா
- தேக்கம்பட்டி புத்துணர்ச்சி முகாம்: யானைகள் தேக்கம்பட்டி புத்துணர்ச்சி முகாம்
- பொங்கல் திருவிழா: யானைகள்