தமிழகம் மாநில அளவிலான வாலிபால் போட்டி கடலூர்,திருவாரூர் அணிகள் சாம்பியன் Jan 14, 2020 கைப்பந்து போட்டி அணிகள் திருவாரூர் கடலூர் சாம்பியன் மாநிலம் தழுவிய கைப்பந்து போட்டி ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மகளிர் பிரிவில் கடலூர், ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணிகள் கோப்பையை வென்றன. ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கம், ஓஎன்ஜிசி இணைந்து பெரியார் ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6ம் ஆண்டு மாநில அளவிலான போட்டி ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இதில் அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகபட்டினம் அணிகள் பங்கேற்றன. மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 27: 25, 18:25, 25:22 என்ற செட் கணக்கில் ராமநாதபுரம் அணியை, கடலூர் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அரியலூர் அணி 3ம் இடமும், புதுக்கோட்டை அணி 4ம் இடமும் பிடித்தன. ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவாரூர் அணி புதுக்கோட்டை அணியை வென்றது. ராமநாதபுரம் அணி 3ம் இடமும், கடலூர் அணி 4ம் இடமும் பிடித்தன. பரிசளிப்பு விழாவிற்கு டாக்டர் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். போட்டியில் வென்ற அணிகளுக்கு ராமநாதபுரம் வாலிபால் சங்க தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். இதில் செயலர் சோமசுந்தரம், பொருளாளர் யூசுப்கனி, இணை செயலர்கள் ரமேஷ் பாபு, தமிழரசு, ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க செயலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!