சென்னை: மும்பை அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் எடுத்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 488 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் ஆதித்யா தாரே 154 ரன் விளாசினார். பிஸ்டா 41, லால்வானி, தமோர் தலா 21, சர்பராஸ் கான் 36, முலானி 87, அத்தார்தே 58 ரன் எடுத்தனர். தேஷ்பாண்டே 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தமிழகம் 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் 52, சூர்யபிரகாஷ் 11 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். முகுந்த் 58 ரன் எடுத்து (112 பந்து, 8 பவுண்டரி) தேஷ்பாண்டே பந்துவீச்சில் பிஸ்டா வசம் பிடிபட்டார். சூர்யபிரகாஷ் - கவுஷிக் காந்தி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தது.