ஆம்பூர் அருகே கள்ளச்சாராயம் தயாரித்து விற்கும் பெண்கள்...கள்ளச்சாராயம் விற்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெண்களே கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனை செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணியார்குப்பம்,  சின்ன பள்ளிக்குப்பம் ஆகிய கிராமங்களில் வீடுகளிலும், வயல்வெளிகளில் பெண்களே கள்ளச்சாராயம் தயாரித்து வந்துள்ளனர். இதனை பெண்களே விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து புகார் அழிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சமூகவிரோத காட்சிகளை யாரோ சிலர் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட தற்போது அது வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வாணியம்பாடி மது விளக்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: