வருசநாடு: மயிலாடும்பாறை அருகே செங்குளம் கண்மாயைத் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே செங்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 127 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ள ஆனால் இங்கு தனிநபர் அதிகளவில் கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்து கண்மாயை தூர்வார முடியாத அளவிற்கு தலையீடு செய்து வருகின்றன, இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது மேலும் கிராமங்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் குடிநீர் பஞ்சம் வருவதற்கும் அறிகுறியாக இருந்துவருகிறது எனவே செங்குளம்கண்மாயை தூர்வாரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதனி நபர்களை அகற்றி பொதுப்பணித்துறை கண்மாயை முழுமையும் கரைகளை பலப்படுத்திடவும் மூல வைகை ஆற்று நீரை கண்மாய்களில் தேக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.