ஜேஎன்யூ பல்கலை.மாணவர்களை சந்தித்த தீபிகா படுகோனுக்கு சஞ்சய் ராவுத் ஆதரவு

மும்பை: நடிகை தீபிகா கடந்த செவ்வாய்க்கிழமை ஜேஎன்யூ பல்கலைக்கழகத்துக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களிடம் தனது ஆதரவை தெரிவித்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பாஜ தலைவர்கள் சிலர் தீபிகாவை கண்டித்துள்ளனர். தீபிகா இடதுசாரிகளை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் தனது “சபாக்” திரைப்படத்துக்கு விளம்பரம் தேடுவதற்காகவே தீபிகா இதுபோல ‘ஸ்டண்ட்’ அடிக்கிறார் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நடிகை தீபிகாவுக்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில் ‘‘நாட்டை “தலிபான்” ஸ்டைலில் நடத்த முடியாது. “சபாக்” திரைப்படத்தை புறக்கணிக்கும்படி கூறுவது மிகவும் தவறு’’ என்று அவர் கூறினார்.

Related Stories: