அமித் வர்மா அபார சதம் கோவா 252/7

புதுச்சேரி அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய ரஞ்சி பிளேட் பிரிவு லீக் ஆட்டத்தில், கோவா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்துள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் சங்க 2வது மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற புதுச்சேரி முதலில் பந்துவீசியது. கோவா தொடக்க வீரர்கள் ஆதித்யா கவுஷிக் 0, சுமிரன் அமோங்கர் 6 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த ஸ்மித் பட்டேல் 35, ஸ்நேஹல் கவுதாங்கர் 3, பிரபுதேசாய் 18, தர்ஷன் மிசல் 7, லக்‌ஷய் கார்க் 29 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடி சதம் அடித்த கேப்டன் அமித் வர்மா 113 ரன் (192 பந்து, 15 பவுண்டரி), அமுல்யா பாண்டேகர் 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். புதுச்சேரி பந்துவீச்சில் வினய் குமார், அஜித் சங்கனகல் தலா 2, சாகர் திரிவேதி 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: