பாபநாசம்: தாராசுரம் கருப்பண்ண சுவாமி கோயில் குளத்தை சுற்றி காம்பவுன்ட் சுவர் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் சாலை திருப்பத்தில் கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் உள்ள குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால் நாளடைவில் இந்த குளம் குப்பைகளால் தூர்க்கப்படும் அபாயம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீரும் கலக்கின்றது. எனவே இந்த குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.