புதுடெல்லி: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சந்தா கோச்சாரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடாக நிறுவனம் ஒன்றுக்கு வஙகி கடன் வழங்கியதாக சந்தா கோச்சார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.