போட்டி வேட்பாளர்கள் 13 பேருக்கு கல்தா: அரியானா காங்கிரஸ் அதிரடி


சண்டிகர் : அரியானாவில் வரும் 5ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் ஆளும் பாஜ கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பாஜவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து பல தொகுதிகளில் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த கட்சியினரே போட்டி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். 13 தொகுதிகளில் காங்கிரஸ் பிரமுகர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அவர்களை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரியானா காங்கிரஸ் தலைவர் உதய்பான் தெரிவித்தார்.

The post போட்டி வேட்பாளர்கள் 13 பேருக்கு கல்தா: அரியானா காங்கிரஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: