வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று


திருவனந்தபுரம்: துபாயிலிருந்து கேரளா வந்த மலப்புரம் மாவட்டம் எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயதான ஒரு வாலிபருக்கு சமீபத்தில் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு கேரள இளைஞருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாலிபர் வெளிநாட்டிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம் வந்திருந்தார்.

அப்போது முதலே இவருக்கு காய்ச்சலும், உடலில் சில தடிப்புகளும் காணப்பட்டதை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் இந்த வாலிபருக்கு குரங்கம்மை நோய் பாதித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று appeared first on Dinakaran.

Related Stories: