தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அமித்ஷா ஆலோசனை

புதுடெல்லி:  குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று உயர்நிலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: