கேரளாவில் மீண்டும் பன்றி காய்ச்சல் 230 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2  வருடங்களுக்கு முன்பு பன்றி காய்ச்சல் பரவியது. அப்போது 10க்கும்  மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் அருகே உள்ள  ஆனையம்குன்னு அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ  மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் பரவியது. இந்த பள்ளியில் சுமார் 230  பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை  முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்படுள்ளது.  பன்றி  காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: