சென்னை: தர்பார் பட கருத்துக்கள் சசிகலாவை பற்றியதாக இருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியின்போது கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கல் பரிசு 4 நாட்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். தர்பார் படத்தில் உள்ள கருத்துக்களை நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால் பணம் சிறைச்சாலை வரை பாய்வதாக கருத்து உள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான்.