காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்களை உணவு மற்றும் குடிநீரில் விஷத்தை கலந்து கொலை செய்ய பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அந்த நாட்டு ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு மட்டும், ஜம்மு -காஷ்மீர் மாநில எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதிகள், சர்வதேச எல்லைப் பகுதியில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 1,400 முறைக்கும் மேல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.