புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு துறை சார்பில் சாரம், திலாஸ்பேட், வில்லியனூர், உத்திரவாகினிபேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கான்பெட் பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வந்தன. இந்த பெட்ரோல் பங்க்குகளில் ஒருசிலவற்றை தவிர்த்து பெரும்பாலானவை தற்போது மூடப்பட்டு விட்டன. திறமையற்ற நிர்வாகம், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இந்த பெட்ரோல் பங்க்குகள் செயல்பாடற்று மூடிக் கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் அமுதசுரபி பங்கிற்கு ரூ.2.30 கோடி பாக்கி காரணமாக அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியாத அவலம் ஏற்பட்டு முதல்வர் நாராயணசாமி தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு கண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் மூடப்பட்டு கிடக்கும் கான்பெட் பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானவை மாட்டு கொட்டகையாக காட்சியளிக்கிறது.