பரஸ்பர உறவில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் புத்தாண்டு வாழ்த்து

டெல்லி: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமெரிக்க மக்கள் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் வெற்றி பெற  பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தார். மேலும், நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட  இந்தியா-அமெரிக்க உறவுகள் பலத்திலிருந்து வலிமைக்கு வளர்ந்துள்ளன. பரஸ்பர உறவில் அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தங்களுடன் ( டிரம்ப் ) தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும்  பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து, இந்திய மக்களுக்கு இந்த புத்தாண்டு செழிப்பையும் முன்னேற்றத்தையும் கொடுக்கட்டும் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தொலை பேசியில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களை  போலவே இருதரப்பு உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெற்று புதிய சகாப்தம் உருவாக்க டிரம்ப உறுதியளித்துள்ளார்.

Related Stories: