உடன்குடி: உடன்குடி காலன்குடியிருப்பு பெரிய தெருவில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியதெரு ஜமாத் நிர்வாகி அபூ உபைதா, பேரூராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு., உடன்குடி காலன்குடியிருப்பு பெரிய தெரு கீழசரக தெருவில் குடிநீருக்கான மெயின்குழாய் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடைந்து தண்ணீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.