டெல்லி: மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம் என மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திய தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி அளித்துள்ளார். நாட்டின் முதலாவது முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இதற்கு முன்பு வகித்து வந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். பிபின் ராவத் வகித்துவந்த ராணுவத்தளபதி பதவியில் ஜெனரல் முகுந்த் நரவனே பதவியமர்த்தப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மனோஜ் முகுந்த் நரவானே இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ராணுவ துணைத் தளபதியாக இருந்த மனோஜ் முகுந்த் நரவானே இந்தியாவின் 28 ஆவது ராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.