சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சர்தாஜ்பேகம் என்பவர் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. எனக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் வேலூரை ேசர்ந்த சையத் இப்ராஹிம் என் குடும்பத்தினருடன் பேசி என்னை கடந்த 2014 ஆண்டு திருமணம் என்ற நிக்காஹ் முடித்தார். ஒரே வீட்டில் நாங்கள் மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்தோம். என்னுடைய குழந்தைகளின் கல்விக்காக வைத்திருந்த ₹4 லட்சம் பணத்தை வாங்கி கொண்டார். பிறகு நான் பணத்தை திரும்ப கேட்ட போது, வீட்டிற்கு வருவதை நிறுத்திவிட்டார்.