பியாங்யாங்: எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தாக்குதல் நடவடிக்கைகள் முக்கியம் என்று வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார். இதனால் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் அணுஆயுதங்களை சோதனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு, வடகொரியா ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கட்சியின் மூத்த அதிகாரிகளுடன் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆலோசனை நடத்தினார்.