பிரதமர் வீடு அருகே எஸ்பிஜி அலுவலகத்தில் திடீர் தீவிபத்து

புதுடெல்லி; டெல்லியில் பிரதமர் வீடு அருகே அமைந்துள்ள சிற ப்பு பாதுகாப்பு படை வரவேற்பு வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளித்து வரும் சிறப்பு பாதுகாப்பு படையின் வரவேற்பு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில்தான் இந்த தீ பற்றியது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ள லோக் கல்யான் மார்க் வளாகத்தில் நேற்று திடீரென சிறிய அளவில்  தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது இல்லமோ அமைந்துள்ள பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சிறப்பு பாதுகாப்பு படையினரின் வரவேற்பறை பகுதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டது என்றுகூறப்பட்டுள்ளது.

Related Stories: