சென்னை: சென்னையில் பாலங்களின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடங்களை சீரமைத்து குழந்தைகளுக்கான பூங்கா மற்றும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
இதில் பணிகள் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், பாலங்கள் துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பாலங்களின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதை தவிர்க்கவும், அந்த இடத்ைத பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.