சென்னை: கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கோவை, துடியலூரை அடுத்த பன்னிமடையில், கடந்த மார்ச் மாதத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடும் வழங்கிட வேண்டும்.