சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,: இலங்கையின் சுதந்திர தினத்தன்று, சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது என, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘இலங்கையின் சுதந்திர தினத்தன்று, சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. இலங்கை அரசின் இத்தகைய பேரினவாதப் போக்கு, இலங்கையில் தமிழர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழி வகுக்கும். எனவே, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: