டெஹ்ரான்: ஈரானில் அணுமின் நிலையம் அருகே நேற்று 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஈரானின் தெற்கு பகுதியில் புஷேர் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. அந்நாட்டின் ஒரே அணுமின் நிலையமான இங்கு 1000 மெகவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில்தான் ஈரான் அணுகுண்டு தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த அணுமின் நிலையம் அருகே நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போரஸ்ஜான் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில், 38 கிமீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.