திருமலை: ஆந்திராவில் கார் மீது பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவின் ராயச்சோட்டியில் உள்ள டிரங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபி. இவர் நேற்று காலை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது குடும்பத்தினருடன் வந்தார். சிகிச்சைக்கு பிறகு அனைவரும் காரில் ராயச்சோட்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது கே.வி.பள்ளி மண்டலம், மகால் கிராஸ் அருகே ராயச்சோட்டியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது மோதியது.