மெரினாவில் மாணவன் பலி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை பைகிராப்ட் சாலையை சேர்ந்தவர் பிரைன் கிங்ஸ்லி(16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் மெரினா கடற்கரைக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலை பின்பிறம் உள்ள கடலில் இறங்கி தனது நண்பர்களுடன் குளித்தார். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் பிரைன் கிங்ஸ்லி மட்டும் சிக்கி கொண்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அனைவரும் அலறினர். பிரைன் கிங்ஸ்லி உடல்சிறிது நேரத்தில் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மெரினா போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: