சென்னை : அமைச்சர் ஜெயக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. மீனவர்களுக்கு விரோதியாகத்தான் செயல்படுகிறார் என்று அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொருளாளர் பி.வெற்றிவேல், அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன் உட்பட பலர் சுனாமியால் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது: அமைச்சர் ஜெயக்குமார் கண்டபடி பேசி வருகிறார். கண்டிப்பாக வருத்தப்படுவார். அமைச்சர்கள் யாரும் இதுபோல் பேசுவதில்லை. இவரும் ராஜேந்திர பாலாஜியும்தான் பேசுகிறார்கள்.