மும்பை: கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் சதவிகிதம் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின் படி அனைத்து வங்கிகளின் மொத்த வாராக்கடன் 11.2 சதவீதத்தில் இருந்து 9.1 சதவீதமாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 14.6 சதவீதத்தில் இருந்து 11.06 சதவீதமாக குறைந்துள்ளது. 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த வாராக்கடன் விகிதம் முதல் முறையாக குறைந்திருந்தாலும் வங்கிகளின் கடனளிக்கும் திறன் பெரிய அளவில் மேம்படவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
