திருமலை: அலிபிரியில் கட்டப்படும் கோ பிரதட்சண சாலையை விசாகா சாரதா பீடாதிபதி சொரூபானந்த சுவாமி ஆய்வு செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டியின் நன்கொடை மூலம் அலிபிரியில் 13 கோடியில் கோ பிரதட்சண சாலை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விசாகா சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்த சுவாமி, தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சொரூபானந்த சுவாமி கூறுகையில், `ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வாகனங்களில் வரும் பக்தர்களும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்களும் அலிபிரியில் கட்டப்படும் சப்த கோ பிரதட்சண சாலையை தரிசித்து பூஜைசெய்து திருமலைக்கு சென்று மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் கோவிந்தனை தரிசனம் செய்வதால் முக்தி கிடைக்கும்’ என்றார்.
அலிபிரி கோ பிரதட்சண சாலை விசாகா சாரதா பீடாதிபதி ஆய்வு
- அலிபிரி கோ முதன்மை சாலை விசாக சாரதா ஆசிரிய ஆய்வு
- அலிப்ரி கோ முதல்வர் சா லாய் விசாகா சரதா ஆசிரிய ஆய்வு