கல்லூரி மாணவர் குத்திக்கொலை: காதல் விவகாரமா?

கரூர்: கரூர் தாந்தோணிமலை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கார் மெக்கானிக். இவரது மகன் மணிகண்டன் (19). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள அசோக் நகரில் ஒரு காலி இடத்தில் மார்பு. வயிறு பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் மணிகண்டன் கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதியில் சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த மணிகண்டன் பெற்றோரும், உறவினர்களும் அவரை டூவீலரில் தூக்கி சென்று கரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.போலீசார் விசாரணையில், நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறிலோ அல்லது காதல் விவகாரத்திலோ மணிகண்டன், நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டனின் நண்பர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: