பெலகாவி : கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், கோகாக் தாலுகாவில் கடபிரபா-சிக்கோடி இரட்டை ரயில் பாதை திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. இதில் ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கலந்து கொண்டார். பின்னர், அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போரா ட்டம் என்ற பெயரில் ரயில்வேக்கு சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகள் நாசம் செய்யப்பட்டுள்ளது. இதைவேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. ஆகவேதான், ரயில்வே சொத்துகளை யார் சேதப்படுத்த முயற்சித்தாலும் அவர்களை கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்று மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன்.