திருமலை: தெலங்கானாவில் கூடுதல் எஸ்பி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 30 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்து வருபவர் நரசிம்ம ரெட்டி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணி முதல் ஐதராபாத், ரங்காரெட்டி, சித்திப்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் நரசிம்ம ரெட்டிக்கு சொந்தமான அலுவலகம், வீடு, உறவினர் வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.