திண்டுக்கல்: தமிழகம் - இமாச்சலப் பிரதேசம் அணிகள் மோது ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.சமீபத்தில் தொடங்கிய ரஞ்சி கோப்பை 2019-20 சீசனில், தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணியிடம் 26 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இந்த நிலையில், தனது 2வது லீக் ஆட்டத்தில் அங்கித் கல்சி தலைமையிலான இமாச்சலப் பிரதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தேவையில்லாமல் தோல்வியைத் தழுவியதால், விஜய் ஷங்கர் தலைமையிலான தமிழக அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழகம் - இமாச்சல் இன்று பலப்பரீட்சை : என்பிஆர் கல்லூரியில் தொடக்கம்
- ராஞ்சி டிராபி லீக்
- போட்டியில்
- ஹிமாச்சல பிரதேசம்
- தமிழ்நாடு
- என்.பி.ஆர் கல்லூரி
- ராஞ்சி டிராபி லீக் தொடங்கி