சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை சாலையில் மரக்கடை நடத்தி வரும் ராமநாதன் என்பவரின் வீட்டிற்கு நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த 3 பேர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். ராமநாதன் கூச்சலிட்டதை அறிந்து அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டதும் அவரை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.