சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட்-2பிஆர் 1 செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி- சி47 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீனபடங்களை அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைக்கோள்களை கடந்த மாதம் 27ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி- சி48 ராக்கெட் மூலம் 11ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. எனவே, திட்டமிட்டப்படி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மதியம் 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.