அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இன்று சீராய்வு மனு தாக்கல் செய்கிறது இந்து மகாசபை

டெல்லி: அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்து மகாசபை இன்று சீராய்வு மனு தாக்கல் செய்கிறது. அயோத்தி நில வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; முஸ்லிம்களுக்கு வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்து மகாசபை அமைப்பானது சுவாமி சக்ரபாணி மற்றும் சிஷிர் சதுர்வேதி ஆகியோர் தலைமையில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. சதுர்வேதி தலைமையிலான பிரிவின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.

Related Stories: