திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றில் லாரிகளில் குப்பைகளை எடுத்து வந்து கொட்டியதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதன்காரணமாக வெள்ளாற்றில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீர் கடந்த 2ம் தேதி மாலை 3 மணியளவில் திட்டக்குடியை வந்தடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்குகளுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள குப்பைகளை வெள்ளாற்றில் மூன்று மினி லாரிகளில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.