கொல்கத்தா: வெங்காயத்தின் விலை கிலோ 150ஐ எட்டியுள்ளதால், வெளிநாட்டில் இருந்து 800 டன் வெங்காயத்தை மேற்குவங்க மாநில அரசு இறக்குமதி செய்கிறது.நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. மழை காரணமாக விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது, பயிரிடும் நிலப்பரப்பு குறைந்து என்று பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, சென்னையிலேயே ஒரு கிலோ தரமான வெங்காயத்தின் விலை 150-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், மேற்கு வங்க மாநிலத்திலும் ஒரு கிலோ வெங்காயம் 150க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி அம்மாநில அரசு, வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயத்தை 88க்கு வாங்கி, நியாய விலைக்கடைகள் மற்றும் நடமாடும் நியாய விலைக்கடைகள் மூலம் 65க்கு விற்று வருகிறது.